என் மலர்
உள்ளூர் செய்திகள்

தி.மு.க. அரசை கண்டித்து கூடலூரில் அ.தி.மு.க.வினர் ஆா்ப்பாட்டம்
- அ.தி.மு.க. திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி வருகிறது
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடந்தது.
ஊட்டி,
தி.மு.க. அரசை கண்டித்து கூடலூரில் அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமை யில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிழக்கு ஒன்றிய செயலாளா் மொய்தீன் முன்னிலை வகித்தாா்.
தெப்பக்காடு பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும். மசினகுடி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு போதிய ஆசிரியா்களை நியமிக்க வேண்டும். வீடு இல்லாதவா்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும். தெப்பக்காடு பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் கூறியதாவது:-
தெப்பக்காடு பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும். மசினகுடி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு போதிய ஆசிரியா்களை நியமிக்க வேண்டும். வீடு இல்லாதவா்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும். தெப்பக்காடு பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும்.
அ.தி.மு.க. அரசின் திட்டங்களை முடக்கும் விதமாக தி.மு.க. அரசு செயல்படுகிறதுஅ.தி.மு.க. அரசால் கூடலூர் பஸ்நிலைய மேம்பாட்டிற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது இன்று வரை இதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.கூடலூர் பகுதி அரசு மருத்துமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லை. அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. கூடலூர்சட்ட மன்ற தொகுதி அ.தி.மு.க. வெற்றி தொகுதி என்பதால் ஒதுக்கபட்ட தொகுதியாக மாறி உள்ளது. இதை உடனடியாக தவிர்த்து மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட பேரவை மாவட்ட செயலாளர் சாந்தி ராமு, கூடலூர் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன், முன்னாள் அமைச்சா் மில்லா் ,கேத்தி பேருராட்சி செயலாளர் கண்ணபிரான், குன்னூர் நகர மன்ற உறுப்பினர் குரு மூர்த்தி உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.






