search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனிம வளம் கடத்தலுக்கு எதிர்ப்பு: கடையத்தில் வீட்டில் இருந்தபடி போராட்டம் நடத்திய சிறுவர்கள்
    X

    கனிம வளம் கடத்தலுக்கு எதிர்ப்பு: கடையத்தில் வீட்டில் இருந்தபடி போராட்டம் நடத்திய சிறுவர்கள்

    • கடையம் சின்னத்தேர் பகுதி அருகில் குழந்தைகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
    • 3 பேரும் அவர்களது வீட்டிற்கு சென்று போராட்டத்தை தொடர்ந்தனர்.

    கடையம்:

    கடையம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளம் கடத்தப்படு வதை தடுக்க கல்யாணிபுரம் பகுதியை சேர்ந்த கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் தலைமையில் ஏராளமான போரா ட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக பூமிநாத் மகன் அஸ்வின் சுவநாத் மற்றும் அவரது சகோதரர் சந்திரசேகர் மகள்கள் சுப பிரியங்கா (வயது 11), சுபிதா (8) ஆகிய 3 பேரும் கனிம வளங்கள் கடத்தலை தடுக்கக் கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினர். மேலும் தமிழ்ப்புத்தாண்டு நாளை முன்னிட்டு பட்டினி போராட்டம் நடத்த இருப்ப தாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று குழந்தைகள் 3 பேரும், அவரது பெற்றோருடன் கடையம் சின்னத்தேர் பகுதி அருகில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அனுமதி இல்லாத காரணத்தினால் பூமிநாத், சந்திரசேகர், கீழக்கடையம் மாரியப்பன் ஆகிய 3 பேரையும் போலீசார் அழைத்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து குழந்தைகள் 3 பேரும் அவர்களது வீட்டிற்கு சென்று பட்டினி போரா ட்டத்தை தொடர்ந்தனர். இதுகுறித்து தகவலறிந்த முன்னாள் அம்பை எம்.எல்.ஏ.வும், இயற்கை வள பாதுகாப்புச் சங்க தலைவருமான ரவி அருணன், செயலாளர் ஜமீன், தெற்கு கடையம் ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அந்த குழந்தைகளை சந்தித்து ஜூஸ் வழங்கி, பேச்சு வார்த்தை நடத்தி போராட்ட த்தை கைவிட செய்தனர். தொடர்ந்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றவர்களும் உண்ணா விரதத்தில் ஈடுபட்டதால் அங்கேயும் இவர்கள் சென்று பேச்சு வார்த்தை நடத்தி ஜூஸ் வழங்கினர். தொடர்ந்து மாலையில் 3 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

    Next Story
    ×