search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமிக்கு வீரவாள் வழங்கி அ.தி.மு.க.வினர் வரவேற்பு
    X

    எடப்பாடி பழனிசாமிக்கு வீரவாள் வழங்கி அ.தி.மு.க.வினர் வரவேற்பு

    • பொள்ளாச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அ.தி.மு.க. பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்தார்.

    பொள்ளாச்சி,

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அ.தி.மு.க. பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பொள்ளாச்சி வந்தார். அவருக்கு பொள்ளாச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பொள்ளாச்சி -கோவை சாலையில் காரில் வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர். அப்போது காரில் இருந்து திறந்த வாகனத்தில் ஏறி ஊர்வலமாக வந்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன், அமுல்கந்தசாமி, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் வரவேற்பு அளித்தனர் .

    பொள்ளாச்சி ஜெயராமன், வீரவாள் வழங்கி வரவேற்றார். அதற்குப் பிறகு காந்தி சிலை இருந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

    எடப்பாடி பழனிசாமி பேச்பேசை தொடங்கும் போது முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை நினைவு கூர்ந்தார். இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பொள்ளாச்சி வருகிறேன். என்னை கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இத்தனை பேர் திரண்டு வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். நிகழ்ச்சியில் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×