search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை மாநாடு வெற்றி பெற வேண்டி ஊட்டி மாரியம்மன் கோவிலில் அ.தி.மு.க.வினர் சிறப்பு பூஜை
    X

    மதுரை மாநாடு வெற்றி பெற வேண்டி ஊட்டி மாரியம்மன் கோவிலில் அ.தி.மு.க.வினர் சிறப்பு பூஜை

    • மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் ஊர்வலம்
    • 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    மதுரை மாநகரில் அ.தி.மு.க மாநாடு நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து 1000க்கும் மேற்பட்டோர் செல்ல தயாராகி வருகின்றனர்.

    இந்த நிலையில் மதுரையில் நடக்க உள்ள அ.தி.மு.க மாநாடு வெற்றி பெறவும், அதிமுக ஆட்சி மலரவும் வேண்டி ஊட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்துவது என்று கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துனர்.

    இதற்காக அவர்கள் ஊட்டி காபிஹவுஸ் பகுதியில் இருந்து மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.

    நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் சண்முகம் ஏற்பாடு செய்து இருந்தார். அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, கூடலூர் எம்.எல்.ஏ பொன்ஜெயசீலன், மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பாசறை மாவட்ட செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான அக்கீம்பாபு ஆகியேர் முன்னிலை வகித்தனர்.

    குன்னூர்நகர செயலாளர் சரவணகுமார், ஒன்றிய செயலாளர்கள் கடநாடுகுமார், பேரட்டி ராஜி, ஹேம்சந்த், தப்பகம்பை கிருஷ்ணன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் டாக்டர் குருமூர்த்தி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நகர செயலாளரும், கிளை கழக செயலாளருமான நொண்டிமேடு கார்த்திக், வண்டிசோலை முன்னாள் ஊராட்சி தலைவர் சதிஷ்குமார், ஓ.சி.எஸ். தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி காபி ஹவுஸ் பகுதியில் தொடங்கிய அ.தி.மு.க.வினரின் ஊர்வலம், ஊட்டி மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது.

    அதன்பிறகு மதுரை மாநாடு வெற்றி பெறவும், அ.தி.மு.க ஆட்சி அமைத்து கழக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராகவும் வேண்டி, ஊட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    Next Story
    ×