search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.முக. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

    • நகர இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஆர்.வினோத்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.
    • செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் சா.இராசேந்திரன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைமலைநகர் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நகர இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஆர்.வினோத்குமார் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தண்ணீர் பந்தலை செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் சா.இராசேந்திரன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களும் பழரசங்களும் கொடுத்தார்.

    நிகழ்ச்சியில் நகர செயலாளர் டிஎஸ் ரவிக்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் கஜா (எ) கஜேந்திரன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஏஎஸ் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×