search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூரில் அ.தி.மு.க. சார்பில் பேரணி
    X

    கூடலூரில் அ.தி.மு.க. சார்பில் பேரணி

    • கூடலூா் தொகுதியில் கடந்த ஒருவார காலமாக தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
    • பேரணி பழைய பஸ் நிலையம் வழியாக சுங்கம் ரவுண்டானா சென்று காந்தித் திடலில் நிறைவடைந்தது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்ட பகுதியை விரிவாக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கூடலூா் தொகுதியில் கடந்த ஒருவார காலமாக தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி அ.தி.மு.க சாா்பில் அமைப்புச் செயலாளா் ஏ.கே. செல்வராஜ் எம்.எல்.ஏ. அ.தி.மு.க நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் பேரணி நடைபெற்றது. ராஜகோபாலபுரத்தில் இருந்து துவங்கிய பேரணியானது பழைய பஸ் நிலையம் வழியாக சுங்கம் ரவுண்டானா சென்று காந்தித் திடலில் நிறைவடைந்தது.

    இதைத் தொடா்ந்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏ.கே.செல்வராஜ் பேசுகையில், அ.தி.மு.க ஆட்சியில்தான் ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

    இப்பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்து இத்தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.பி.ஆ.ராசா நாடாளுமன்றத்தில் பேசுவதே இல்லை. ஆனால், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜெயசீலன், தொகுதியின் நலனுக்காக பல பிரச்னைகள் சட்டப் பேரவையில் பேசியுள்ளாா் என்றாா்.

    ஆா்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன், முன்னாள் அமைச்சா் மில்லா், முன்னாள் எம்.பி. அா்ஜுணன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, வர்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, பாசறை மாவட்ட செயலாளர் அக்கீமபாபு, குனானூர் ஒன்றிய செயலாளர் பேரட்டிராஜி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×