search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனத்தில் பரபரப்பு  அண்ணா சிலை கூண்டு பூட்டை உடைத்த அ.தி.மு.க.வினர்
    X

    அண்ணா சிலை கூண்டின் பூட்டு உடைக்கப்பட்டது.

    திண்டிவனத்தில் பரபரப்பு அண்ணா சிலை கூண்டு பூட்டை உடைத்த அ.தி.மு.க.வினர்

    • அதிமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்திருந்தார்.
    • அதிகாரிகள் சாவி தொலைந்து விட்டதாக பதில் அளித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சாரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் அண்ணா சிலை, காந்தி சிலை உள்ளது. இந்த 2 சிலைகளுக்கும் கூண்டு அமைக்கப்பட்டு பூட்டு போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜேந்திரன் மற்றும் அதிமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்திருந்தார்.

    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அண்ணா சிலைக்கு கூண்டு போடப்ப ட்டிருந்த பூட்டின் சாவி அ.தி.மு.க.வினர் கேட்டனர். ஆனால் அதிகாரிகள் சாவி தொலைந்து விட்டதாக பதில் அளித்ததால் அண்ணா சிலைக்கு போட்டிருந்த பூட்டு உடைத்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். அதிகாரிகளின் அலட்சி யத்தால் அண்ணா சிலையின் கூண்டின் பூட்டு உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

    Next Story
    ×