search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கை
    X

    தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கை

    • அசல் மற்றும் தலா 3 எண்ணிக்கை நகல்கள் மற்றும் மார்பளவு புகை ப்படங்கள் 6 ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.
    • மாணவர் சேர்க்கை தொடர்பான காலியிட விவரங்களை www.gacdpi.ac.in என்ற இணைய தளத்தில் காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நாளை மறு நாள் 23-ம் தேதி இளம் நிலை வகுப்புகளுக்கு உள்ள காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கவுள்ளது.

    இதுகுறித்து, தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வர் கண்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அரசு கலைக் கல்லூரி யில் 2023-2024-ம் கல்வி யாண்டில் இளம்நிலை பாடப்பிரிவுகளில் காலி யாக உள்ள சில சேர்க்கை இடங்களுக்கு, வரும் 23-ம் தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைப்பெற உள்ளது.

    எனவே, ஏற்கனவே விண்ணப்பித்து சேர்க்கை கிடைக்க பெறாத மாணவ, மாணவியர் கலந்தாய்வில் பங்கேற்று பயன்பெறலாம்.

    சேர்க்கைக்கு வரும் போது விண்ணப் படிவம், அசல் மாற்றுச் சான்றிதழ், அசல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் தலா 3 எண்ணிக்கை நகல்கள் மற்றும் மார்பளவு புகை ப்படங்கள் 6 ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.

    மேலும், கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு களுக்கு ரூ.2 ஆயிரத்து 980, அறிவியல் பாடப்பிரிவு களுக்கு ரூ.3,000, பி.காம்(சிஏ), பி.எஸ்சி, கணினி அறிவியல், பிசிஏ பாடப்பிரிவுகளுக்கு ரூ.2 ஆயிரத்து 100 எடுத்து வர வேண்டும்.

    அதேப்போல, மாணவர் சேர்க்கை தொடர்பான காலியிட விவரங்களை www.gacdpi.ac.in என்ற இணைய தளத்தில் காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×