search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் ஆங்கில பாடப்பிரிவு மாணவர் சேர்க்கை
    X

    அரூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் ஆங்கில பாடப்பிரிவு மாணவர் சேர்க்கை

    • ஆங்கிலப் பாடப்பிரிவிற்கு மட்டும் நாளை முதல் சேர்க்கை நடைபெறகிறது.
    • காலை 10 மணிக்குள் கல்லூரி சேர்க்கை குழுவின் முன் ஆஜராகுமாறு கேட்டுக்–கொள்ளப்படுகிறார்கள்.

    அரூர்,

    அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    2023-24-ம் கல்வி–யாண்டின் முதுநிலை கலை பாடப் பிரிவுகளுக்கு அரூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலப் பாடப்பிரிவிற்கு மட்டும் நாளை (7-ந் தேதி) முதல் சேர்க்கை நடைபெறகிறது.

    எனவே, இணையதள வழியே விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் அனைவரும் தங்கள் அசல் சான்றிதழ்களுடன் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, இளநிலைப் பாடப் பிரிவுகளின் மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் (அசல் மற்றும் நகல்-2 பிரதிகளில்) நாளை காலை 10 மணிக்குள் கல்லூரி சேர்க்கை குழுவின் முன் ஆஜராகுமாறு கேட்டுக்–கொள்ளப்படுகிறார்கள். இதற்காக கட்டணமாக ரூ.1500 செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×