search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே  விவசாய நிலத்தில் பிணம் புதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: துணை மேயர் தலைமையில் கோரிக்கை மனு
    X

    கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

    கடலூர் அருகே விவசாய நிலத்தில் பிணம் புதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: துணை மேயர் தலைமையில் கோரிக்கை மனு

    • பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் காழ்புணர்ச்சி காரணமாக மாற்று சமூகத்தினர் பிணத்தை புதைத்து வைத்துள்ளனர்.
    • சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய அபாயமும் நிலவி உள்ளது.

    கடலூர்:விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் நிர்வாகிகள் கண்ணன், ஆட்டோ பாஸ்கர், இளங்கோவன் மற்றும் பலர் கோரிக்கை மனு அளித்தனர்.இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வடலூர் அருகே கருங்குழி-கொளக்குடி செல்லும் வழியில் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் காழ்புணர்ச்சி காரணமாக மாற்று சமூகத்தினர் பிணத்தை புதைத்து வைத்துள்ளனர். இதன் காரணமாக விவசாயம் செய்யவிடாமல் தடுத்து விட்டனர். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய அபாயமும் நிலவி உள்ளது. ஆகையால் இது சம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×