என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் விபத்து: ஆட்டோ மோதி சைக்கிளில் சென்ற மாணவன் சாவு
- சம்பவத்தன்று பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரியை அடுத்துள்ள மதிகோன்பாளையம் தெருவை சேர்ந்தவர் மாதையன்.இவரது மகன் குருசரண்(வயது 17). தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
சாலை விநாயகர் கோவில் அருகே குருசரண் சென்றபோது அவ்வழியாக வந்த ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் குருசரணுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு பின்னர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தருமபுரி நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






