search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் அருகே கூட்டுறவு அதிகாரி வீட்டில் ஏ.சி. எந்திரத்தில் மின் கசிவால் தீ விபத்து
    X

    சூலூர் அருகே கூட்டுறவு அதிகாரி வீட்டில் ஏ.சி. எந்திரத்தில் மின் கசிவால் தீ விபத்து

    • பொருட்கள் எரிந்து நாசமானது
    • கணவன்-மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

    சூலூர்,

    சூலூர் அருகே புதிய பஸ் நிலையம் பின்புறம் குடியிருப்பு பகுதியில் நல்லுசாமி (வயது 68) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். நல்லுசாமி கூட்டுறவுத் துறையில் துணை பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    நேற்று முதல் மாடியில் வீட்டின் படுக்கை அறையில் ஏசி எந்திரத்தை இயக்கி விட்டு விட்டு கீழே உள்ள வரவேற்பறையில் தனது உறவினருடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென மேல் மாடியில் படுக்கை அறையில் இருந்து புகை வருவதை கண்டார்.

    உடனே சத்தமிட்டு அருகில் இருப்போரை அழைத்தார். அப்போது தீ மளமளவென அறை முழுவதும் பரவியது. உடன டியாக மின்சாரத்தை துண்டித்து இது பற்றி சூலூர் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    சூலூர் தீயணைப்பு துறை அலுவலர் ரகுநாதன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் உடனடியாக படுக்கை அறை க்குள் சென்று அங்கு பற்றி இருந்த தீயை அணைத்தனர். அப்போது படுக்கை அறையில் மாட்டி இருந்த ஏசி மெஷினில் தீப்பிடித்து உருகிய நிலையில் இருந்தது தெரிய வந்தது.

    மேலும் அதில் இருந்து தீ பரவி அருகில் உள்ள பொருட்கள் அனைத்தும் பற்றி எரிந்துள்ளது. தெரிய வந்தது. தீப்பற்றும் போது அந்த அறையில் நல்லுசாமி மற்றும் அவரது மனைவி இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

    Next Story
    ×