என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை மகா முனியப்பன் கோவிலில் ஆடி திருவிழா
- முனியப்பன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி முனியப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
- சுமார் 2000-க்கும் மேற்பட்ட கோழிகள் 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள மகா முனியப்பன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி முனியப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
ஊத்தங்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அதிகாலை முதலே தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் விதமாக கோழி, சேவல்கள், ஆடுகள் போன்றவற்றை பலியிட்டு பிரார்த்தனை செய்தனர்.
சுமார் 2000-க்கும் மேற்பட்ட கோழிகள் 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செய்தனர். மேலும் 5 நாட்களுக்கு மாலை நேரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
மேலும் பெண்கள் தாங்கள் அணிந்து வரும் தங்க ஆபரணங்களை பாதுகாக்கும் விதமாக தொடர்ச்சியாக ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை காவல்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.
Next Story






