என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாரண்டஅள்ளி ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா
- முதல் நாள் கொடியேற்றத்துடன் சனத்குமார் நதியிலிருந்து கங்கை பூஜை உடன் அம்மனுக்கு பால்குடம் எடுத்து தீ மிதித்தல் நடந்தன.
- கோட்டை மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து கூழ் ஊற்றுதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி இ.பி. காலனியில் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவிலில் 4-ம் ஆண்டு ஆடி மாத திருவிழா நடைபெற்றது.
மூன்று நாட்கள் கொண்ட திருவிழாவையொட்டி முதல் நாள் கொடியேற்றத்துடன் சனத்குமார் நதியிலிருந்து கங்கை பூஜை உடன் அம்மனுக்கு பால்குடம் எடுத்து தீ மிதித்தல் நடந்தன.
அன்று இரவு அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து ஊர் மண்டு மாரியம்மன் மற்றும் கோட்டை முனியப்பனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
இதையடுத்து கோட்டை மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து கூழ் ஊற்றுதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
விழாவையொட்டி தினந்தோறும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா மற்றும் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.மேலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன.
இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் கோவில் நிர்வாகிகள் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.






