search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் ஆர்.எம்.எஸ். அலுவலகத்தில் ஆதார் சேவை மையம்
    X

    கோப்புபடம்

    திருப்பூர் ஆர்.எம்.எஸ். அலுவலகத்தில் ஆதார் சேவை மையம்

    • தொலைபேசி எண் இணைப்பு மாற்றம் போன்ற சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது
    • அலுவலகத்தில் இதற்கான ஆதார் ேசவை மையம் செயல்படுகிறது.

    திருப்பூர் :

     இந்திய அஞ்சல் துறை யூ.ஐ.டி.ஏ.ஐ. உடன் இணைந்து புதிய ஆதார் எடுத்தல், ெபயர் திருத்தம், முகவரி மாற்றம் தொலைபேசி எண் இணைப்பு மாற்றம் போன்ற சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. திருப்பூர் ரெயில்வே சந்திப்பு வளாகத்தில் இயங்கி வரும் திருப்பூர் ஆர்.எம்.எஸ். அலுவலகத்தில் இதற்கான ஆதார் ேசவை மையம் செயல்படுகிறது. இந்த மையம் கடந்த 31-ந் தேதியில் இருந்து மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வருகிறது. பல்வேறு பணிகளுக்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி இந்த ேசவை மாலை நேரத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த சேவையை பயன்படுத்திக்ெகாள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை கோவை கோட்ட ஆர்.எம்.எஸ். முதுநிலை கண்காணிப்பாளர் அகில் ஆர்.நாயர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×