search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்ன சேலம் அருகே ஆடு திருடிய வாலிபர் கைது
    X

    சின்ன சேலம் அருகே ஆடு திருடிய வாலிபர் கைது

    • கட்டியிருந்த ஆட்டை அவிழ்த்து மோட் டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு தப்பி யோட முயற்சித்தார்.
    • மணி கண்டன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், மோட்டார் சைக்கிளை பறி முதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பொற்படாகுறிச்சி கிராம த்தைச் சேர்ந்த நடராஜன் (வயது 68) விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு கட்டிபோட்டு விட்டு, நிலத்திற்கு நீர் பாய்ச்சி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்மநபர், கட்டியிருந்த ஆட்டை அவிழ்த்து மோட் டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு தப்பி யோட முயற்சித்தார். ஆடு கூச்சலிட்ட சத்தம் கேட்டு ஓடிவந்த நடராஜன், மர்ம நபரை மடக்கிபிடித்து தர்ம அடி கொடுத்தார். பின்னர், மர்மநபரை சின்னசேலம் போலீசாரிடம் ஓப்படைத்தார். விசாரணை யில் முடியனுர் மேற்கு தெருவை சேர்ந்த மணி கண்டன் (வயது 33) என்பது தெரியவந்தது. மணி கண்டன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், மோட்டார் சைக்கிளை பறி முதல் செய்தனர்.

    Next Story
    ×