என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரத்தில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை
- முத்துக்குமாருக்கு திருமணம் முடிப்பதற்காக அவரது தந்தை பெண் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
- விரக்தியில் இருந்த முத்துக்குமார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் உள்ள ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் முத்துக்குமார் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவரது தாய் இறந்து 20 ஆண்டுகளுக்கு மேலானதால் முத்துக்குமார் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியதாகவும், அவருக்கு திருமணம் முடிப்பதற்காக அவரது தந்தை பெண் பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் இருந்த முத்துக்குமார், நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று முத்துக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






