என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே பாட்டி திட்டியதால் வாலிபர் தற்கொலை
- அக்பர் அலி சமீபகாலமாக மல்லக்குளத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார்.
- அக்பர் அலியை தோட்டத்தில் கட்டியிருந்த மாடுகளை அவிழ்த்து வீட்டுக்கு அழைத்து வருமாறு அவரது பாட்டி தெரிவித்துள்ளார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள மல்லக்குளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சம்சுதீன். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இவர் தனது குடும்பத்தினருடன் கோவில்பட்டியில் தங்கியிருந்து பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் அக்பர் அலி(வயது 19) படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலை பார்த்து வந்தார்.
சமீபகாலமாக இவர் மல்லக்குளத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு அவர் திடீரென வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அக்பர் அலியை தோட்டத்தில் கட்டியிருந்த மாடுகளை அவிழ்த்து வீட்டுக்கு அழைத்து வருமாறு அவரது பாட்டி தெரிவித்துள்ளார்.
ஆனால் அதனை அக்பர் அலி செய்ய மறுத்து, வீட்டில் அமர்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருந்ததாகவும், அதனை அவரது பாட்டி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






