என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாரமங்கலத்தில் இளம்பெண் மாயம்
    X

    தாரமங்கலத்தில் இளம்பெண் மாயம்

    • அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜி (வயது 71). இவருக்கு 2 மகனும் மஞ்சு (28) என்ற ஒரு மகளும் உள்ளனர்.
    • இளம்பிள்ளைக்கு சேலை மடிக்கும் வேலைக்கு சென்று வந்தார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் 7-வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜி (வயது 71). இவருக்கு 2 மகனும் மஞ்சு (28) என்ற ஒரு மகளும் உள்ளனர். மஞ்சுவிற்கு திருமணம் ஆகிவிட்டது. அவர் கணவரை பிரிந்து தந்தை ராஜி வீட்டில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மேலும் இளம்பிள்ளைக்கு சேலை மடிக்கும் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 3-ந்தேதி வேலைக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை.

    அக்கம் பக்கம் உறவினர் வீடுக்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி ராஜி தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மஞ்சுவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×