என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் மாயம்
    X

    இளம்பெண் மாயம்

    • வைஷ்ணவி தனதுதோழி ஸ்ரீத்ரிகாவிற்கு போன் செய்து தான் ஆணாக மாறி உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது.
    • வீட்டில் இருந்த ஸ்ரீத்ரிகா திடீரென்று காணவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கோழிமேக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாது. இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு ஸ்ரீத்ரிகா (வயது19) என்ற மகள் உள்ளார்.

    அதேபகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்ப–வரின் மகள் வைஷ்ணவி (19). இருவரும் சிறுவயதில் இருந்து பள்ளியில் ஒன்றாக படித்து வந்ததால் இணை–பிரிய முடியாத தோழிகளாக இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் வைஷ்ணவி தனதுதோழி ஸ்ரீத்ரிகாவிற்கு போன் செய்து தான் ஆணாக மாறி உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த ஸ்ரீத்ரிகா திடீரென்று காணவில்லை. இதனால் பதறிப்போன அவரது தாயார் சத்யா தனது மகளை உறவினர்கள் வீடுகளில தேடிபார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கா–ததால், மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து தாய் பாப்பி–ரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஸ்ரீத்ரிகாவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×