search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணவனுடன் தகறாறில்  பெண் தூக்குபோட்டு தற்கொலை
    X

    கணவனுடன் தகறாறில் பெண் தூக்குபோட்டு தற்கொலை

    • 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் ஒன்றை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
    • மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அருள் (வயது27) இவருடைய மனைவி அமுல் (23) . இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் ஒன்றை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று மதியம் அருள்வேலைக்கு சென்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார் குடிபோதையில் இருந்த அருள் அவரது மனைவி அமலுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மணமுடைந்த அமுல் தனது சேலையை எடுத்து மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அவரது கணவர் அருள் அதிர்ச்சி அடைந்து தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.

    இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அமுலின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×