என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி அருகே இன்று விபத்து மொபட் மீது லாரி மோதியது- சிறுமி உள்பட 2 பேர் பலி
    X

    ஊட்டி அருகே இன்று விபத்து மொபட் மீது லாரி மோதியது- சிறுமி உள்பட 2 பேர் பலி

    • குன்னூர் மலைப்பாதையில் மந்தடா என்ற இடத்தில் டிப்பர் லாரி மோதி விபத்து
    • ராஜாவும், 15 வயது சிவசங்கரியும் பலியாயினர். ஓட்டல் உரிமையாளர் மனைவி கைக்குழந்தையுடன் உயிர்தப்பினார்

    ஊட்டி,

    கோவை ஒண்டிபுதூரைச் சேர்ந்தவர் ராஜா. இவர் அங்குள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் இன்று காலை தான் பணியாற்றும் ஓட்டல் உரிமையாளரின் மனைவி, 15 வயது மகள் சிவசங்கரி, ஒரு மகன் ஆகியோருடன் ஒரு மொபட்டில் ஊட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

    குன்னூர்- ஊட்டி மலைப்பாதையில் மந்தடா என்ற இடத்தில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று மொபட் மீது மோதியது.

    இதில் மொபட் லாரியின் அடியில் சிக்கியது. இந்த விபத்தில் ராஜாவும், 15 வயதான சிவசங்கரியும் பலியானார்கள். ஓட்டல் உரிமையாளரின் மனைவி மற்றும் கைக்குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    ஓட்டல் உரிமையாளரின் குடும்பத்தினர் எதற்காக ஊட்டி சென்றனர் என்று தெரியவில்லை. டிப்பர் லாரி வேகமாக வந்ததால் விபத்து நடந்தது தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×