search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயியிடம் கடன் வாங்கி திருப்பி செலுத்தாத வியாபாரிக்கு ஓராண்டு சிறை
    X

    விவசாயியிடம் கடன் வாங்கி திருப்பி செலுத்தாத வியாபாரிக்கு ஓராண்டு சிறை

    • 6 மாதத்துக்குள் கடனை திருப்பி செலுத்துமாறு அழகிரியிடம் போலீசார் எழுதி வாங்கினர்.
    • சிவஞானத்திடம் வாங்கிய ரூ.15 லட்சத்தை 2 மாதத்துக்குள் திருப்பி செலுத்த அழகிரிக்கு உத்தரட்டு, ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்தவர் சிவஞானம் (வயது 50) விவசாயி. இவர் நாஞ்சிக்கோட்டை சாலை காத்ததூண் நகரை சேர்ந்த வியாபாரியான அழகிரி என்ற பரமானந்தழகன் (47) என்பவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு ரூ.15 லட்சம் கடன் கொடுத்திருந்தார். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் அவர் அந்த கடனை திருப்பி செலுத்தவில்லை. இது குறித்து சிவஞானம் பலமுறை அழகிரியிடம் கேட்டு பார்த்தும் பயன் இல்லை. இதனால் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு சிவஞானம் புகார் செய்தார். அதன்பேரில் 6 மாதத்துக்குள் கடனை திருப்பி செலுத்துமாறு அழகிரியிடம் போலீசார் எழுதி வாங்கினர். அப்படியும் அவர் கடனை திருப்பி கொடுக்காததால் 2018-ம் ஆண்டு தஞ்சை விரைவு நீதிமன்றத்தில் சிவஞானம் வழக்கு தொடர்ந்தார்.

    இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிவஞானத்திடம் வாங்கிய ரூ.15 லட்சத்தை 2 மாதத்துக்குள் திருப்பி செலுத்த அழகிரிக்கு உத்தரவிட்டது. மேலும் அழகிரிக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

    Next Story
    ×