search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருடி விட்டு சாவகாசமாக ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு செல்லும் திருடன்
    X

    திருட்டு நடந்த கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்.

    திருடி விட்டு சாவகாசமாக ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு செல்லும் திருடன்

    • சேலம் ரோடு பகுதியில் திரையரங்கு அருகில் ஐஸ்கிரீம் கடை ஒன்று உள்ளது.
    • பணத்தை திருடியதுடன் சாவகசமாக ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு சென்றுள்ளனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,-

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டவுன் பகுதி சேலம் ரோடு பகுதியில் திரையரங்கு அருகில் ஐஸ்கிரீம் கடை ஒன்று உள்ளது.

    அந்த கடையில் நள்ளிரவில் புகுந்த இரண்டு திருடர்கள் கடையில் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் இருந்த 1200 ரூபாய் பணத்தை திருடியதுடன் சாவகசமாக ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு சென்றுள்ளனர்.

    பின்னர் பொம்மிடியில் உள்ள கடைவீதியில் கம்பியூட்டர் சென்டர், மளிகை கடை, துணிக்கடை, மரப்பட்டறை, பேக்கரி, ஆப்டிகல் கடை, சோபா கடை என பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் நள்ளிரவில் பூட்டுகளை உடைத்து சிறு, சிறு தொகைகளை திருடி சென்றுள்ளனர்.

    இன்று காலை கடைகளின் உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது பூட்டுக்கள் உடைக்கப்பட்டு திருடர்கள் புகுந்திருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஒருவர் பின் ஒருவராக 10-க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் பொம்மிடி போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் விரைந்தஅங்கு வந்த போலீசார் அனைத்து கடைகளிலும் கை ரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    ஐஸ்கிரீம் கடையில் உள்ளே புகுந்த திருடன் கடையின் கல்லாப்பெட்டியில் அமர்ந்து பணத்தை எண்ணி எடுபதும், அடுத்ததாக ஐஸ்கிரீம் எடுத்து வந்து சேரில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு வெளியேறுவதும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

    ஆனால் கடையின் வெளியில் இருந்த கேமராவை உடைத்து எரிந்துள்ளார்கள். திருடனின் முகம் தெளிவாக கேமராவில் பதிவாகியுள்ளதால் காவல்துறையினர் விரைவில் பிடிப்பார்கள் என்று தெரிகிறது.

    பொம்மிடியில் இருந்து 24 மணி நேரமும் வெளியூர் செல்ல போக்குவரத்துக்கான வசதி உள்ளதால் வெளியூரில் இருந்தும் சர்வசாதாரணமாக திருடர்கள் திருடி செல்லும் சம்பவங்கள் நடப்பதாகவும், வட இந்தியர்கள் பொம்மிடியில் பெருமளவு உள்ளதால் இது போன்ற சம்பவம் நடப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இச் சம்பவம் இப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×