என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பட்டாணி கடையில் பயங்கர தீ விபத்து
- இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார்.
- இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் திடீரென கடையில் தீ பற்றி எரிய தொடங்கியது.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசல் திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் காமராஜ்.
இவர் கீழவாசல் அண்ணாசாலையில் சரபோஜி மார்க்கெட் அருகில் பட்டாணி, அவல் மற்றும் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் திடீரென கடையில் தீ பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் மளமளவென தீ பற்றி எரிந்து கொண்டி ருந்தது.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்க தீயை அணைத்தனர்.
இருப்பினும் கடையின் பெருமளவு பகுதி எரிந்து சேதமானது. இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் . முதல் கட்ட விசாரணையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இருப்பினும் தீ விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்க டையில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து சேதம் அடைந்ததில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது என்று கூறப்ப டுகிறது.இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படு த்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்