என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் மோதி  நடந்து சென்ற வாலிபர் பலி
    X

    கார் மோதி நடந்து சென்ற வாலிபர் பலி

    • திருவண்ணாமலை பெங்களூரு சாலையில் ஆதவன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா பக்கிரிபாளையம் அருகே உள்ள பள்ளிப்பட்டி சாலையை சேர்ந்தவர் சென்ன கிருஷ்ணன். இவரது மகன் ஆதவன் (வயது 19). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் திருவண்ணாமலை பெங்களூரு சாலையில் அந்தேரிப்பட்டி பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அந்த நேரம் அவ்வழியாக சென்ற கார் ஆதவன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆதவன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×