என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மோதியதில் வாலிபர் பலி
    X

    லாரி மோதியதில் வாலிபர் பலி

    • எதிரே வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதிராம்பட்டினம்:

    பட்டுக்கோட்டை அருகே சேதுபாவாசத்திரம் அடுத்த மனோரா சுற்றுலா தலத்திற்கு பட்டுக்கோட்டை பாளையம் பகுதியை சேர்ந்த பிரவீன் (வயது 22) மற்றும் அவரது நண்பர் பாப்பாநாடு ஆம்லாபட்டு பகுதியை சேர்ந்த ஹரிஷ் (21) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் மல்லிப்பட்டினம் அருகே சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் உடல் நசுங்கி பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    படுகாயம டைந்த ஹரிஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு பேராவூ ரணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, சேதுபாவா சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×