என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்த வாலிபர்
- உடலிலும், முகத்திலும் ரத்த காயங்களுடன் ஆண் ஒருவரது உடல் கிடந்தது.
- கொன்று உடலை இங்கு வீசியுள்ளனரா?என்று விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே டேனிஷ் நகர் பகுதியில் இருந்த ஒரு தோப்பில் உடலிலும், முகத்திலும் ரத்த காயங்களுடன் ஆண் ஒருவரது உடல் கிடந்தது.
இது குறித்து மூக்கண்ட பள்ளி கிராம நிர்வாக அதிகாரி விவேக் ஷர்மா என்பவர் ஹட்கோ போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விரைந்து வந்து அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிணமாக கிடந்தவர் யார் என்று விசாரணை நடத்தினர்.
அதில் இறந்து கிடந்தவர் பெங்களூரு தேசிங்கு நகரை சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 29) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் எவ்வாறு உயிரிழந்தார்? இந்த பகுதிக்கு வந்தது ஏன்? யாராவது அவரை அடித்து கொன்று உடலை இங்கு வீசியுள்ளனரா?என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
Next Story






