search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விக்கிரவாண்டி அருகே லாரி மீது ஜீப் மோதியதில் வாலிபர் சாவு
    X

    விபத்துக்குள்ளான ஜீப்

    விக்கிரவாண்டி அருகே லாரி மீது ஜீப் மோதியதில் வாலிபர் சாவு

    • சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் ஜீப் பயங்கரமாக மோதியது.
    • வில்லியம்ஸ், ரெஜியஸ்ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    விழுப்புரம்:

    உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வில்லியம்ஸ் (வயது 30), அந்தோணி ராஜ் (26)ரெமிஜியஸ் ( 22)ஆக 3 பேர் ஜிப்பில் இறையானூரி லிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். விக்கிரவாண்டி அருகே சித்தானி அருகே சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் ஜீப் பயங்கரமாக மோதியது. இதில் அந்தோணி ராஜ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். வில்லிய ம்ஸ், ரெஜியஸ்ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    தகவல் அறிந்து வந்த விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காத்த முத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்த வர்களை உடனடியாக முண்டியம் பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்பு லன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் அந்தோணி ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×