search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
    X
    கோப்பு படம்.

    ஆரல்வாய்மொழி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

    வெல்டிங் பட்டறையில் வேலை செய்தபோது பரிதாபம்

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி அருகே மாதவலாயம் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகன் முகமது அசாருதீன் (வயது 23).

    இவர், ஆரல்வாய்மொழி அருகே மாதவராயன் கைகாட்டி பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலையில் முகமது அசாருதீன் வெல்டிங் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக அவரது மீது மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்ட முகமது அசாருதீன் மயங்கிய நிலை யில் கிடந்தார்.

    உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். முகமது அசாருதீனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.பலி யான முகமது அசாருதீன் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதை யடுத்து அவரது உறவினர்கள் அங்கு திரண்டு இருந்தனர்.

    Next Story
    ×