search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளிக்கு ஆம்னி பேருந்துகளில் கூடுதல்  கட்டண வசூலை தடுக்க ஆய்வு- அமைச்சர் சிவசங்கர் தகவல்
    X

    (கோப்பு படம்)

    தீபாவளிக்கு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டண வசூலை தடுக்க ஆய்வு- அமைச்சர் சிவசங்கர் தகவல்

    • கூடுதல் கட்டணம் வசூலித்தால் பயணிகளிடம் திருப்பிக் கொடுக்க நடவடிக்கை.
    • தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களுக்காக இதுவரை 91,000 பேர் பயணம்.

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது தொடங்கியுள்ளது.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளதாவது:

    பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டி, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் (வெள்ளிக்கிழமை) இயக்கப்படுகிறது. இன்று வழக்கமான பேருந்துகளுடன் 2,100 உடன், 1430 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

    இதுவரை 91,000 பேர் தமிழகம் முழுவதும் பயணம் செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெரிய அளவில் புகார்கள் இல்லை. எனினும், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். குறிப்பிட்ட சில ஆம்னி பேருந்துகள், இணையதளம் மூலமாக அதிக கட்டணம் வசூலிப்பது தெரிந்தால், டிக்கெட் கட்டணத்தை தாண்டி, மீதி கட்டணத்தை பயணியிடம் திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×