search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
    X

    கோப்பு படம்

    நிலக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

    • நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.
    • இந்த முகாமில், 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. முகாமில், மாற்றுத்திறனாளிக்கான 35 கிலோ அரிசி, வீட்டு மனைக்கான பட்டா வேண்டி மனு அளித்தனர்.

    மேலும், மத்திய அரசு வழங்கும் தனித்துவ அடையாள அட்டை வழங்க வேண்டி மனு அளித்தனர். முகாமில், நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, சமூக நலத்துறை தனி தாசில்தார் ஆறுமுகம் மனுக்களை பெற்றனர்.

    மேலும், மருத்துவ பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளிகளின் உடல் நிலைக்கேற்ப அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் துணை தாசில்தார் அபிராமி, மண்டல துணை தாசில்தார்கள் பாலகுருநாதன், மூர்த்தி, நிலக்கோட்டை வருவாய் ஆய்வாளர் பிரியங்கா,

    கிராம நிர்வாக அலுவலர் கலா, டிசம்பர் 3 இயக்கம் மாநில துணைத்தலைவர் மோகன்ராஜ் மற்றும் எலும்பியல் மருத்துவர், நரம்பு மண்டல மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்கினர். இந்த முகாமில், 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×