search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தனூர் அணையில் 17,000 கனஅடி நீர் திறப்பு தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
    X

    தென்பெண்ணை ஆற்றில் பாய்ந்தோடும் வெள்ளத்தை படத்தில் காணலாம்.

    சாத்தனூர் அணையில் 17,000 கனஅடி நீர் திறப்பு தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

    • சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 17,000 கன அடி தண்ணீர் ஆனது வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • கீழையூர் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து சென்று விட்டது.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 17,000 கன அடி தண்ணீர் ஆனது வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது இரு கரையையும் ஆக்கிரமித்து ஓடும் இந்த வெள்ள நீரானது திருக்கோவிலூர் அரகண்டநல்லூரை இணைக்கும் தரைப்பாலத்தின் மீது சுமார் 2 அடிக்கும் மேலாக பாய்ந்து செல்கிறது. தண்ணீரின் வேகம் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் திருக்கோ–விலூர் கீழையூர் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து சென்று விட்டது இதனால் இனி தரைப்பாலத்தை பொது–மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியே என்ற நிலைக்கு தரைப்பாலம் உள்ளாகியுள்ளது.

    மேலும் தரைப் பாலத்தின் மீது ஓடும் தண்ணீரின் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளதால் தரைப் பாலத்தின் 2 பக்கத்திலும் போலீசார் தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தண்ணீர் கடலூர் ஆல்பேட்டைவழியாக கடலில் கலக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஆற்றோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது

    Next Story
    ×