search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்
    X

    ஓசூரில் பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்

    • பாம்பு படம் எடுத்து அந்த நாயை தீண்ட முற்பட்டது.
    • பரபரப்பான இந்த சண்டையில் கடும் கோபத்தில் இருந்த நாய், பாம்பை கடித்து குதறியது.

    ஓசூர்,

    கிருஷ்ண கிரி மாவட்டம், ஓசூர் சீதாராம் நகர் பகுதியில் உள்ள ரிங் ரோடு அருகே தனியாருக்கு சொந்த மான ஒரு சிற்ப கலைக்கூடம் உள்ளது. இங்கு, நேற்று ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகே உள்ள மலையில் இருந்து வெளியேறிய நாகப்பாம்பு ஒன்று சிற்ப கலைக்கூடத்திற்குள் புகுந்தது.

    இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அப்போது பாம்பை பார்த்த சிற்ப கலைக்கூடத்தில் வளர்க்கப்பட்டு வரும் நாய் ஒன்று, அதனை கடித்தது.

    அப்போ து, பாம்பு படம் எடுத்து அந்த நாயை தீண்ட முற்பட்டது. இதில் பாம்புக்கும், நாய்க்கும் ஆக்ரோஷ சண்டை ஏற்பட்டது. பரபரப்பான இந்த சண்டையில் கடும் கோபத்தில் இருந்த நாய், பாம்பை கடித்து குதறியது. நீண்ட நேரம் பாம்பை நாய் கடித்து குதறியதால், சிறிது நேரத்தில் அந்த பாம்பு அங்கேயே உயிரிழந்தது.

    பாம்பு உயிரிழந்த பின்புதான், அந்த நாய் சமாதானமடைந்தது. இந்த சம்பவம் காரணமாக,. சிற்பக்கூடத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. மேலும்,அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களும் அச்சம் விலகாமலேயே காணப்பட்டனர்.

    Next Story
    ×