என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றாலத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆண் பிணம்
    X

    குற்றாலத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆண் பிணம்

    • நாய்கள், காட்டுப்பன்றிகள் இறந்து கிடந்த நபரின் உடலை கடித்திருந்தது.
    • இறந்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    குற்றாலத்தில் மரங்களுக்கு இடையில் அழுகிய நிலையில் 45 வயது முதல் 50 வயது வரை மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அந்த நபரின் உடலை நாய்கள், காட்டுப்பன்றிகள் கடித்திருந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நபர் இறந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபரின் முழு தகவல் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×