search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளத்துக்கால்வாயில் ரேஷன் கடைக்குள் குட்டிகளுடன் புகுந்த யானைக்கூட்டம்
    X

    கோப்பு படம்

    பள்ளத்துக்கால்வாயில் ரேஷன் கடைக்குள் குட்டிகளுடன் புகுந்த யானைக்கூட்டம்

    • கடந்த சில வாரங்களாக பள்ளத்து க்கால்வாய் பகுதியில் காட்டுயானை அட்டகாசம் செய்து வருகிறது.
    • ரேஷன் கடைக்கு யானை குட்டியுடன் சென்று கடை யில் உள்ள இரும்பு ஜன்னலை உடைத்து ரேஷன் அரிசி மூடைகளை தூக்கி சேதப்படுத்தின.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான தாண்டிக்குடி, பெரியூர், பெருங்கானல், பள்ளத்துகால்வாய், சேம்படி ஊத்து உள்ளிட்ட வனப்பகுதி களில் யானை, காட்டெருமை, மான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் காணப்படுகின்றன. இவை தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகின்றன.

    இங்கு தொடர்ந்து காட் டுயானை கள் அட்டகாசம் அதிகரி த்துள்ளது. தோட்டங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் முள்வேலி, சோலார் வேலி ஆகியவற்றை அவை சேதப்படுத்தி விடுகின்றன.

    பின்னர் தோட்டங்களு க்குள் புகுந்து காபி, வாழை, ஆரஞ்சு, மிளகு. அவரை, பீன்ஸ், சவ்சவ் உள்ளிட்ட பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. சில நேரங்க ளில் காட்டுயானைகளின் தாக்கு தலுக்கு தோட்ட தொழிலாளர்கள் பலியாகி விடுகின்றனர். கடந்த சில வாரங்களாக பள்ளத்து க்கால்வாய் பகுதியில் காட்டுயானை அட்டகாசம் செய்து வருகிறது.

    நேற்று பள்ளத்து க்கால்வாய் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு யானை குட்டியுடன் சென்று கடை யில் உள்ள இரும்பு ஜன்னலை உடைத்து ரேஷன் அரிசி மூடைகளை தூக்கி சேதப்படுத்தின.

    பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றன. செல்லும் வழியில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி சென்றது. இது குறித்து தகவல் அறிந்த கன்னிவாடி வனத்துறை யினர் அங்கு விரைந்து சென்று யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×