என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கனமழையால் நெற்பயிர்களை நிமிர்த்தி கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி
Byமாலை மலர்4 Feb 2023 8:18 AM GMT
- அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை.
- வேருடன் பயிர் சாய்ந்ததால் கட்டினாலும் மீண்டும் சாய்ந்து அழுகக்கூடிய நிலை ஏற்படும்.
தஞ்சாவூா்:
தஞ்சை மாவட்டம் திருவை யாறு, அந்தணர்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது . தொடர்ந்து பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கரில் உள்ள நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சாய்ந்த நெற்பயிர்களை தூக்கி நிமிர்த்தி கட்டி காப்பாற்றும் பணியில் விவசாயிகள் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருந்த போதிலும் வேருடன் பயிர் சாய்ந்ததால் கட்டினாலும் பிரயோஜனப்படாமல் மீண்டும் சாய்ந்து அழுகக்கூடிய நிலை ஏற்படும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
எனவே துறை அதிகாரிகள் பாதிப்படைந்த பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு உரிய நிவாரண தொகை கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X