சாம்பவர்வடகரை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலி

வேலாயுதபுரம் அருகே வந்தபோது மாடு மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முருகன் பலியானார்.
சாம்பவர்வடகரை அருகே  மோட்டார் சைக்கிள்  விபத்தில் விவசாயி பலி
Published on

சாம்பவர்வடகரை:

சாம்பவர்வடகரை அருகே உள்ள மேலகடையநல்லூரை சேர்ந்தவர் முருகன் (வயது 42), விவசாயி.

இவர் கடையநல்லூரில் இருந்து சாம்பவர் வடகரைக்கு இருசக்கர வாகனத்தில் வரும் வழியில் வேலாயுதபுரம் அருகே வந்தபோது மாடு மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முருகன் பலியானார். சாம்பவர்வடகரை சப்-இன்ஸ்பெக்டர் காசி விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com