என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்த கல்லூரி மாணவி
- வேறு இடத்தில் மணமகன் தேடியதால் தப்பி ஓட்டம்
- பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
காேவை,
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள செம்பாகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது 20).
இவர் திருப்பூரில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 1 ஆண்டுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் தமிழ்செல்வின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தங்களது மகளுக்கு திருமணம் செய்வதற்காக வேறு இடத்தில் மணமகனை தேடி வந்தனர்.
இதனால் காதலை பிரிந்து விடுவார்களோ என்ற பயத்தில் இருந்த மாணவி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் தனது காதலனை சந்தித்து நடந்த சம்பவங்களை கூறினார். பின்னர் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்த கையோடு காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு ஆழியாறு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் காதலர்களிடம் விசா ரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






