search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி அருகே பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்த கார்காயமடைந்த  5பேருக்கு தீவிர சிகிச்சை
    X

    அவினாசி அருகே பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்த கார்காயமடைந்த 5பேருக்கு தீவிர சிகிச்சை

    • தண்டுக்காரன்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார்.
    • விபத்தில் பலத்த காயம் அடைந்த பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அவினாசி :

    ஈரோடு மாவட்டம் புங்கம்பள்ளி ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மனைவி பாப்பாத்தி (வயது51).இவர் திருப்பூர் மாவட்டம் சேவூரை அடுத்த கானூரில் உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் சொந்த ஊர் செல்ல தண்டுக் காரன்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார். மேலும் அதே பஸ் நிறுத்தத்தில் தண்டுக் காரன்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்த காளியம்மாள்(60), அதேஊரைச் சேர்ந்த மஞ்சுளா(38) மற்றும் சின்னக்கானூர் பகுதியை சேர்ந்த ரங்கன் (52) ஆகியோர் புளியம்பட்டி செல்ல பஸ்சுக்காக காத்து நின்றனர்.

    அப்போது திருப்பூர் சாலையில் திருப்பூரை நோக்கி கார் ஒன்று வந்தது. அந்தக் காரில் திருப்பூர் குமாரனந்தபுரத்தை சேர்ந்த கணேஷ் பிரதீப் (34),அவருடைய மனைவி சுமதி (32),மற்றும் இரு குழந்தைகள் இருந்தனர் .காரை கணேஷ் பிரதீப் ஓட்டினார் .இவர் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்தி விட்டு காரில் வந்து கொண்டிருந்தார்.

    இவருடைய கார் தண்டுக்காரன்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் வரும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதன் பின்னரும் அந்தக் கார் நிற்காமல் பஸ்சுக்காக காத்து நின்ற பாப்பாத்தி, காளியம்மாள், மஞ்சுளா மற்றும் ரங்கன் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியதோடு அங்கிருந்த மின்கம்பம் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    காளியம்மாள் ,மஞ்சுளா ,ரங்கன் ஆகியோரும் காரில் இருந்த கணேஷ் பிரதீப்பின் இரண்டு குழந்தைகளும் காயம் அடைந்தனர் .உடனே அங்கிருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இரண்டு குழந்தைகளும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×