search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே பாலம் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த கார்- 3 பேர் படுகாயம்
    X

    பாலத்தின் சுவரில் மோதி கவிழ்ந்த காரை படத்தில் காணலாம்.

    திண்டிவனம் அருகே பாலம் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த கார்- 3 பேர் படுகாயம்

    • திண்டிவனம் வழியாக தனது இனோவா காரில் சென்று கொண்டி ருந்தனர்.
    • தடுப்புக்கட்டையில் வேகமாக மோதி, சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    விழுப்புரம்:

    புதுச்சேரி முத்துப்பிள்ளைப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரராகு, ரியல் எஸ்டேட் பிரமுகர். இவரது மகன் அருண்சர்மா. இவர்கள் 2 பேரும், புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வழியாக தனது இனோவா காரில் சென்று கொண்டி ருந்தனர்.இந்த காரை, புதுச்சேரி உப்பளம் காந்தி தெருவை சேர்ந்த வெங்கட்ராமன், என்பவர் ஓட்டிச்சென்றார். கார் கிளியனூர் அருகே ஓமந்தூரை கடக்கும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் இருந்த தடுப்புக்கட்டையில் வேகமாக மோதி, சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் , வீரராகு, அருண்சர்மா மற்றும் வெங்கட்ராமனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்த கிளியனூர் போலீசார் மற்றும் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் காயம டைந்த 3பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து சம்பவம் குறித்து கிளியனூர் போ லீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×