என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
லாட்டரி சீட்டு விற்றதாக கைது செய்யப்பட்ட வியாபாரிக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்16 March 2023 9:33 AM GMT
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.
- மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி பெருமாள் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 47). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சிவகுமாருக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
அதை தொடர்ந்து சிவக்குமார் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சிவகுமார் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவகுமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட உடன், அவரை கைது செய்த போலீசாரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X