search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
    X

    பண்ருட்டி அருகே மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

    • பண்ருட்டி அருகே மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • 15 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே தொரப்பாடியை சேர்ந்தவர் மணிகண்டன் (26) திருமணம் ஆனவர். மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்துவருகிறார்.இந்த நிலையில் கடந்த 17ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 10ம்வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறிகடத்தி சென்றார்.இதுகுறித்து மாணவியின் தாய் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

    புதுக் கோட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்த ப்பட்ட பள்ளி மாணவியை வலை வீசி தேடி வந்தனர். போலீசாரின்தீவிர தேடு தல் வேட்டையில் மணி கண்டனை மடக்கி பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட பள்ளி மாணவியை கடலூர் மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×