செல்லிக்குறிச்சி ஏரியை தூர்வாரி படகு சவாரி ஏற்படுத்த வேண்டும்

பழமையான 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட செல்லிக்குறிச்சி ஏரி உள்ளது. தற்போது இந்த ஏரி சரியாக தூர்வாரப்படாத நிலையில் உள்ளது.
செல்லிக்குறிச்சி ஏரியை தூர்வாரி படகு சவாரி ஏற்படுத்த வேண்டும்
Published on

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை சாலையில் மிகவும் பழமையான 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட செல்லிக்குறிச்சி ஏரி உள்ளது. இந்த ஏரியால் அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மிகவும் பயனடைகின்றன.

இந்நிலையில், தற்போது இந்த ஏரி சரியாக தூர்வாரப்படாத நிலையில் உள்ளது.

இதனால் ஏரியில் உள்ள தண்ணீர் குறுகிய நாட்களில் வற்றி போகிறது. எனவே, இந்த ஏரியை உடனடியாக தூர்வார வேண்டும். மேலும், அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள மக்களும், சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து நேரத்தை செலவிடும் வகையில் ஏரியில் படகு சவாரி ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் அப்துல் பாசித் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com