search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி அருகே சாலையில் 2 குட்டிகளுடன் உலா வந்த கரடி
    X

    கோத்தகிரி அருகே சாலையில் 2 குட்டிகளுடன் உலா வந்த கரடி

    • உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன.
    • இந்த கரடி பல மாதங்கள் இங்கு தான் சுற்றி திரிகின்றது. குட்டிகளுடன் இருப்பதால் மக்களை தாக்கும் அபாயம் உள்ளது.

    அரவேணு :

    கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன.

    இந்த நிலையில் நேற்று கோத்தகிரி அருகே உள்ள கன்னிகாதேவி காலனி பகுதியில் 2 குட்டியுடன் சாலையில் பெரிய கரடி ஒன்று உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்திய வாகன ஓட்டிகள், தங்களது செல்போனில் கரடிகளை வீடியோ எடுத்தனர்.

    பின்னர் அதனை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த கரடி பல மாதங்கள் இங்கு தான் சுற்றி திரிகின்றது. குட்டிகளுடன் இருப்பதால் மக்களை தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் சாலைகளில் குட்டிகளுடன் உலா வரும் கரடிகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×