search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர்வழி ஆக்கிரமிப்பில் இருந்த 86 வீடுகள் இடித்து அகற்றம்
    X

    நீர்வழி ஆக்கிரமிப்பில் இருந்த 86 வீடுகள் இடித்து அகற்றம்

    • பொதுப்பணித்துறை சார்பில் வீடுகளை காலி செய்யுமாறு கடந்த பிப்ரவரி மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • 86 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பாதுகாப்பாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அணைபுதூர் ஜே.ஜே.நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதில் 130 வீடுகள் நீர்வழி ஆக்கிரமிப்பில் இருப்பதாக கண்டறியப்பட்டது.

    இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் வீடுகளை காலி செய்யுமாறு கடந்த பிப்ரவரி மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள 104 பேருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 18 பேர் அந்த வீடுகளுக்கான தொகையை செலுத்தவில்லை. மேலும் 26 பேர் எங்களுக்கு வீடு வேண்டாம். நிலம் வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

    இதனால் அந்த 44 பேரின் வீடுகள் தவிர, அங்கேயிருந்த 86 வீடுகள் இடித்து அகற்றும் பணி நேற்று காலை தொடங்கியது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலைமையில் நகராட்சி, வருவாய்துறை, மின்வாரியம், காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மீதமுள்ள 44 வீடுகள் மட்டும் அங்கு அகற்றப்படாமல் உள்ளது.

    அவர்களுக்கு காலி செய்து செல்ல 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இடித்து அகற்றப்பட்ட 86 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பாதுகாப்பாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையொட்டி திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    Next Story
    ×