search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது விற்ற பெண்கள் உள்பட 8 பேர் கைது
    X

    மது விற்ற பெண்கள் உள்பட 8 பேர் கைது

    • ஊத்தங்கரை போலீசார் கல்லூர் நாராயண நகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மொத்தம் மதுவிற்றதாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை போலீசார் கல்லூர் நாராயண நகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது உரிய அனுமதியில்லாமல் மதுவிற்பனை செய்த பிரவின் (வயது29), சொரணம் (51) ஆக இருவரையும் கைது செய்து இவர்களிடமிருந்து 8 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கல்லாவி போலீசார் கல்லாவி பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது மது விற்பனை செய்த கீதாவை கைது செய்து அவரிடம் இரண்டு பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.

    சிங்காரப்பேட்டை பகுதியில் வேலன் (21), விக்னேஷ் ஆகிய பேர் தடை செய்யப்பட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சாமல்பட்டி போலீசார் ரோந்து பணி மேற்கொள்ளும் போது மதுவிற்றதாக லலிதா, சேட்டு, முனிராவு ஆகியோரை கைது செய்தனர். மொத்தம் மதுவிற்றதாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×