என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்பாக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 69வது பிறந்தநாள் கொண்டாட்டம்

    • 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டது.
    • பிறந்தநாள் விழாவில் அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    அ.தி.மு.க பொதுச் செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் 69 வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று கல்பாக்கம் புதுப்பட்டினத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் அ.தி.மு.கவினர் எடப்பாடி பழனிசாமி பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    புதுப்பட்டினம் பேருந்து நிலையம் பகுதியில் கேக் வெட்டி கொண்டாடி அன்னதானம் வழங்கப்பட்டு, பயணிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டது.

    முன்னாள் எம்.எல்.ஏ தனபால், புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால், மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், மாமல்லபுரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்வந்த்ராவ், கலியபெருமாள் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×