search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெட்ரோ ரெயிலில் பொங்கல் விடுமுறையில் 6.71 லட்சம் பேர் பயணம்
    X

    மெட்ரோ ரெயிலில் பொங்கல் விடுமுறையில் 6.71 லட்சம் பேர் பயணம்

    • 13ந்தேதி மட்டும் அதிகபட்கமாக 2 லட்சத்து 66 ஆயிரத்து 464பேர் பயணம் செய்துள்ளனர்.
    • 4 நாட்களில் மொத்தம் 6 லட்சத்து 71 ஆயிரத்த 316 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயிலில் நாளுக்கு நாள் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி 13-ந்தேதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்ச மாக 2 லட்சத்து 66 ஆயிரத்து 464 பேர் பயணம் செய்துள்ளனர்.

    அதிகபட்சமாக சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 21,731 பேரும், கிண்டியில் 14,649 பேரும் திருமங்கலத்தில் 13,607 பேரும், விமான நிலையத்தில் 12,909 பேரும் பயணித்தனர்.

    14-ந்தேதி போகிப்பண்டிகை அன்று 1 லட்சத்து 62 ஆயிரத்து 525 பேரும், 15-ந்தேதி பொங்கல் நாளில் 1 லட்சத்து 8160 பேரும், 16-ந்தேதி மாட்டு பொங்கலில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 167 பேரும் பயணம் செய்துள்ளனர். 4 நாட்களில் மொத்தம் 6 லட்சத்து 71 ஆயிரத்து 316 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×