search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரி மாவட்டத்தில் 601 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
    X

    நீலகிரி மாவட்டத்தில் 601 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

    • 2 நாட்கள் ஊர்வலத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
    • கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் 601 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.

    ஊட்டி,

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு வண்ணங்களில் களிம ண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை வீடுகள் மற்றும் பொது இடங்களில் வைத்து வழிபாடு கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    விழா நிறைவ டைந்தவுடன் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலை களில் கரை க்கப்படுகிறது. நீலகி ரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பில், பொது இடங்க ளில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஊட்டி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் 601 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.

    விழாவையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து பூசாரிகள் பேரவைகள் சார்பில் வருகிற 3-ந் தேதியும், மாவட்டம் முழுவதும் இந்து அமை ப்புகள் சார்பில் 4-ந் தேதியும் விநாயகர் சிலை ஊர்வ லங்கள் நடக்கின்றன.

    ஊர்வலத்தின் போது பள்ளிவாசல் வழியாக செல்லும் போது அதிக கோஷம் எழுப்பக்கூடாது, வணிக நிறுவனங்களை மூட சொல்லக்கூடாது, பட்டாசு வெடிக்க கூடாது, எந்தவித சட்ட விரோத நடவடிக்கையிலும் ஈடுபட க்கூடாது என கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். ஊட்டி நகரிலேயே பெரிய விநாயகர் சிலை ஊட்டி பாம்பே கேசியல் பகுதியில் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    Next Story
    ×